பேசலாம் என்றார்கள்
பேசினேன்
என் மக்களிடம்
அவர்கள்
அறியாதிருப்பதை
அறிந்துகொள்ள வேண்டியதை
நிறுத்து - இது
கலகத்தின் குரல்
என்கிறார்கள்.
எழுதலாம் என்றார்கள்
எழுதினேன்
எங்கள் மக்களின்
அவலங்களை
அவஸ்தைகளை
எழுதுகோலை
பிடிங்கி எறிந்தார்கள்
எழுதாதே - இது
எதிர்முனை செய்தி
என்கிறார்கள்.
பாடலாம் என்றார்கள்
பாடினேன்
எஙகளின்
தேவைகளை
உரிமைகளைக் குறித்து
குரல்வளை நெறிக்கிறார்கள்
என் குரல்
ஒன்று ஒப்பாரியாகவோ
போர் பரணியாகவோ
ஒலிக்கிறதென்கிறார்கள்.
என்னைப் பேசச்சொன்னால்
என்னை எழுதச் சொன்னால்
என்னைப் பாடச்சொன்னால்
வேறென்ன பேச
வேறென்ன எழுத
வேறென்ன பாட
என்மக்கள் இன்னும்
உரிமையற்ற மனிதர்களாய்
வாழும் வரையில்
அதைப் பற்றி
பேசாது எழுதாது பாடாது....
அது வரை
என் குரல்
கலகத்தின் குரல்தான்....
பேசினேன்
என் மக்களிடம்
அவர்கள்
அறியாதிருப்பதை
அறிந்துகொள்ள வேண்டியதை
நிறுத்து - இது
கலகத்தின் குரல்
என்கிறார்கள்.
எழுதலாம் என்றார்கள்
எழுதினேன்
எங்கள் மக்களின்
அவலங்களை
அவஸ்தைகளை
எழுதுகோலை
பிடிங்கி எறிந்தார்கள்
எழுதாதே - இது
எதிர்முனை செய்தி
என்கிறார்கள்.
பாடலாம் என்றார்கள்
பாடினேன்
எஙகளின்
தேவைகளை
உரிமைகளைக் குறித்து
குரல்வளை நெறிக்கிறார்கள்
என் குரல்
ஒன்று ஒப்பாரியாகவோ
போர் பரணியாகவோ
ஒலிக்கிறதென்கிறார்கள்.
என்னைப் பேசச்சொன்னால்
என்னை எழுதச் சொன்னால்
என்னைப் பாடச்சொன்னால்
வேறென்ன பேச
வேறென்ன எழுத
வேறென்ன பாட
என்மக்கள் இன்னும்
உரிமையற்ற மனிதர்களாய்
வாழும் வரையில்
அதைப் பற்றி
பேசாது எழுதாது பாடாது....
அது வரை
என் குரல்
கலகத்தின் குரல்தான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக