வெள்ளி, 16 ஜனவரி, 2015

மறந்திடாது...பொங்கல்


பழசுகள் அல்ல
புதுமைகள் பெயரால் வரும்
புதிர்களும்
எரிக்கும் படியாய்தான்...

விளைச்சலைக் கொண்டு
புதிதாய் பொங்கலிட
விவசாயி இல்லை
விளை நிலமெல்லாம்
விற்பனையாகிறது
மனைகளாக...

மாடுகளில்லை
கொம்புகள் சீவி
வண்ணம்தீட்டி
ஓடவிட்டு வீரம் பார்க்க
அடிமாடுகளாய்...
வெட்டுக்கு வரிசையாகி
நிற்கின்றன பாவம்...

காண்போர் கண்டு
வணங்கி எழ
வழியற்றுப்போகிறது
எந்தமலரில் எவ்வகைத்தேன்
பார்ப்பது பழங்கதையாகி
எந்தப் புற்றில்
எவ்வினப்பாம்பு
கணிப்பதே வாழ்வாகும் சூழல்

இருந்தும்
மறந்திடாது
சொல்லுவோம்
பொங்கலோ பொங்கலென்று..

கருத்துகள் இல்லை: