வியாழன், 15 செப்டம்பர், 2016

பாரம்

மௌனமாய்
பார்த்திருந்தேன்
என்னையே
உற்று நோக்குவதாய்
எண்ணிக்கொண்டேன்
சிறிது நேரத்தில்
குரலெழுப்பி
பறந்து மறைந்தது
கிளி.
பார்த்துக்கொண்ட
கனப்பொழுதில்
உள்வாங்கிக்கொண்டோம்
ஒருவருக்கொருவர்
மனபாரம்.

கருத்துகள் இல்லை: