செவ்வாய், 21 ஏப்ரல், 2015

உன் நிலம்-என் இடம்

நீ
எனக்கானவன்
என் எண்ணம்
என் செயல்
எல்லாம் உனக்கானது

நீ
என்னுள் இருக்கிறாய்
எனக்கான எல்லாம்
உள்ளிருக்கும்
உனக்காகவானது

நீ
அறிவாயா
உபதேசித்த கண்ணன்
அர்ஜீனனிடம் சொன்னதை
எல்லாம் நான்
நானே எல்லாமும்

நீ என்று
தனித்து ஏது
உன் செயல் எல்லாம்
எனது செயல்
எனக்கான செயல்
என்னால் செய்யப்படும்
உன்செயல்

எதுவும் நீ அன்று
எதற்கும் நீ அன்று
நானும் அன்று

எல்லாம் அவன்
விளையாட்டில் நிகழ்பவை
என் இடம் நிலைக்க
உன் நிலம் இப்போது
கொடு
கவலை கொள்ளாதே

எது உனது
எதுவும் இல்லை
நாளை என்பதை
இன்றே பார்
வேறு ஒருவனுக்காவதை

இது
தர்மத்தின் காட்சி
மறுக்காதே ஏற்றுக்கொள்

உனது செயல்
எனது செயல்
எனக்கானசெயல்.

கருத்துகள் இல்லை: