வியாழன், 1 அக்டோபர், 2015

காந்தி

காந்தி தாத்தாவே
உம்மிடம் ஒரு கேள்வி
உன் புன்னகையின் பொருள்
என்னதான் தாத்தா...

உழைத்தவன் பணத்திலும் இருக்கிறோம்
ஊழல் பணத்திலும் இருக்கிறோம்
என்பதை எண்ணித்தானே...

அன்று
தொண்டினை வளர்க்க
நினைத்தவன் நீ
இன்றோ
துண்டினை வளர்க்கவே
நினைக்கின்றார்...

காந்திய வழியா
கோட்சே நெறியா...சில
குள்ள நரி கூட்டம்
கோட்சேவையே நாடும்.
எனவே தான்
சிலை வைக்க நினைக்கின்றார்
உன் கொள்கைக்கு
உலை வைக்க துடிக்கின்றார்.

மூவர்ணக் கொடியா...
நால் வர்ண முறையா...
கயவர் உள்ளம்
மூன்றைவிட நான்கே
பெரிதென எண்ணும்.

ஒன்றுமட்டும் உண்மை
உன் சிலை மீது
எச்சமிடும் காக்கையையும்
விரட்டாத உன் கைத்தடி...
நடுவீதியில் நள்ளிரவில் அல்ல
பட்டப் பகலிலேயே
பாழ்படுத்தும் பெண்களையும்
காணாத கண்ணாடியென
இவர்கள்
அஞ்சாமல் இருக்கலாம்.

ஆனால் ஒருநாள்
அதுவும் வாய்பேசும்
அப்போது இவர்கள்
முகமூடி உடையும்
காவி தேச முயற்சி முறிந்து
காந்தி தேசம் நிலைக்கும்.

கருத்துகள் இல்லை: