ஒன்றாகவே இருக்க வேண்டும்
என்றில்லை
ஒன்றாக இல்லாமல் இருப்பதே
கண்டறிய உதவுகிறது.
அடையாளம்.
குரலில் காணலாம் சிலரை
உருவத்தில் அறியலாம் வேறுசிலரை
பழக்க வழக்கங்களும்
காட்டிக்கொடுக்கும் சிலரை
மூக்குப்பொடி அண்ணாவிற்கு-அடுக்கி
முழங்குவது கலைஞருக்கு-வார்த்தை
முழுங்குவது நாவலருக்கு-இவை
முழுதும் சொல்லுவது கவிஞருக்கு.
சாய்வு நாற்காலி என்றால்
சிலருக்கு சில ஞாபகம்
சாம்பாரும் சட்டினியும்கூட
சாயலறிய உதவுகிறது.
பாதரட்சையும்
பயனானது
பாரதமும் இராமாயணமும்
அறிந்துகொள்ள.
வெவ்வேறான அடையாளங்கள்
தீர்மானம் ஆகிறது
எனக்கெது
அறிந்தவர் யார்?
சொல்வீர்
அடையாளம்...
என்றில்லை
ஒன்றாக இல்லாமல் இருப்பதே
கண்டறிய உதவுகிறது.
அடையாளம்.
குரலில் காணலாம் சிலரை
உருவத்தில் அறியலாம் வேறுசிலரை
பழக்க வழக்கங்களும்
காட்டிக்கொடுக்கும் சிலரை
மூக்குப்பொடி அண்ணாவிற்கு-அடுக்கி
முழங்குவது கலைஞருக்கு-வார்த்தை
முழுங்குவது நாவலருக்கு-இவை
முழுதும் சொல்லுவது கவிஞருக்கு.
சாய்வு நாற்காலி என்றால்
சிலருக்கு சில ஞாபகம்
சாம்பாரும் சட்டினியும்கூட
சாயலறிய உதவுகிறது.
பாதரட்சையும்
பயனானது
பாரதமும் இராமாயணமும்
அறிந்துகொள்ள.
வெவ்வேறான அடையாளங்கள்
தீர்மானம் ஆகிறது
எனக்கெது
அறிந்தவர் யார்?
சொல்வீர்
அடையாளம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக