நேற்றைய தினம்
எதிர்பாராமல் நிகழ்ந்தது
நெடுநாளைக்குப்பிறகு
எங்களுக்கான
சந்திப்பு.
சந்திப்பின் ஊடாய்
விரிவடைந்து சென்றது
ஆல விருட்சமாய்
பால்ய நினைவுகள்.
ஐந்தாம்வகுப்பில் இருந்தபோது
ஊர் கம்மாய்
நிறைந்தோட
அம்மாணமாய் குளித்தகாட்சி
அவள் பார்த்துவிட்டாளென
வகுப்பறையில்
நாளெல்லாம்
சொல்லிச்சிரிச்ச
ரெஜினாவையும்
விட்டுவைக்கவில்லை
எங்களின் பேச்சு...
தினம்வீட்டுப்பாடம்
செய்த அவனுக்கும்
ஒரு பிலேட்டும் -சிலேட்டுமாய்
இருந்த எனக்குமான வாழ்க்கை
மாறாட்டம்
இன்னும் அவன்
ஒரு நிரந்தர
வேலைக்கு அல்லாடுவதும்
என்னையும் சொல்லி
மனபாரம் ஆறியது.
மீண்டும்
ஒரு இடைவெளியில்
சந்திக்கும் வரை
சேகரிக்க வேண்டும்
பரிமாறிக்கொள்ள
விதவிதமான
அனுபவங்களை...
எதிர்பாராமல் நிகழ்ந்தது
நெடுநாளைக்குப்பிறகு
எங்களுக்கான
சந்திப்பு.
சந்திப்பின் ஊடாய்
விரிவடைந்து சென்றது
ஆல விருட்சமாய்
பால்ய நினைவுகள்.
ஐந்தாம்வகுப்பில் இருந்தபோது
ஊர் கம்மாய்
நிறைந்தோட
அம்மாணமாய் குளித்தகாட்சி
அவள் பார்த்துவிட்டாளென
வகுப்பறையில்
நாளெல்லாம்
சொல்லிச்சிரிச்ச
ரெஜினாவையும்
விட்டுவைக்கவில்லை
எங்களின் பேச்சு...
தினம்வீட்டுப்பாடம்
செய்த அவனுக்கும்
ஒரு பிலேட்டும் -சிலேட்டுமாய்
இருந்த எனக்குமான வாழ்க்கை
மாறாட்டம்
இன்னும் அவன்
ஒரு நிரந்தர
வேலைக்கு அல்லாடுவதும்
என்னையும் சொல்லி
மனபாரம் ஆறியது.
மீண்டும்
ஒரு இடைவெளியில்
சந்திக்கும் வரை
சேகரிக்க வேண்டும்
பரிமாறிக்கொள்ள
விதவிதமான
அனுபவங்களை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக