சனி, 1 அக்டோபர், 2016

கனவில்...

யானைகள் எல்லாம்
பூனைக்கு சேவகம் புரிகின்றன
காக்கைகள் ஜதி சொல்கிறது
குயில்களுக்கு.

கழுதைகள் ஒன்றுகூடி
ஒருமனதாய் தீர்மானம்
இயற்றிக்கொண்டன
தாங்களே
உலகின் இன்னிசைக்காவலர்கள்.

பூக்களுக்கு இருந்துவந்த
மதிப்பும் மரியாதையும்
இடமாற்றம் கண்டது
இனி எங்கும் முட்கள்.

காலம் மாறிவிட்டது
பகலில் துயில்கொண்டு
இரவில் உலா
எல்லாம் நேற்றைய கனவில்...


கருத்துகள் இல்லை: