பொக்கை வாய் பார்த்து
பாட்டனே அச்சு அசல்
பாட்டி.
பாட்டனே அச்சு அசல்
பாட்டி.
திருட்டு முழியப் பாத்தா
தெரியல அப்படியே அப்பன்
மனைவி.
இன்னும்
உற்றார் உறவினர்களுக்கு
அவரவர் நினைவில்
நிழலாடும் உருவங்கள்.
எதுவும் அறியாது
விளையாடும் குழந்தை
நாளை
யாரின் தாசனாய்
யாரின் பித்தனாய்
முடி வளர்த்து
மீசை மழித்து
யார் போல் இருப்பான்
சொல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக