வியாழன், 7 டிசம்பர், 2017

கொக்கு

கைகளை வாசலாக்கி
இட்டுக் காட்டுகிறாள்
மருதாணிக் கோலம்


வீசும் காற்று
கை விரித்து நடனம்
வயலில் காவல் பொம்மை


காட்டிக் கொடுத்தது
பரந்த உலகிற்கு
இருளை ஒளி

பச்சிளம் கொடி
மெல்ல அசைத்து
இரசிக்கும் தென்றல்


உதிரும் பூ
தேன் குடிக்கும் தரையில்
இறக்கை இல்லா எறும்பு


உழவன் முன் செல்ல
பின்னால் வரும்
வயலில் கொக்கு

கருத்துகள் இல்லை: