செவ்வாய், 5 டிசம்பர், 2017

ரீங்காரம்

தாயைப் பிரிந்த துயர்
குரலெழுப்பி உணர்த்துகிறது
பருந்தின்வாய் கோழிகுஞ்சு


தெளிவாய்ச்சொல்ல சொல்ல
மெல்ல உள்நுழையும்
புற்றில் பாம்பு


விளக்கொளியில் பூனை
நடக்க புலியாக்கும்
ஜன்னல் கம்பி நிழல்


உருட்டி விளையாட பந்து
ஓடி மறைகிறது
அந்திச் சூரியன்


நள்ளிரவுப் பொழுது
கேட்ட பாடல்போல ஒலிக்கிறது
சில்வண்டின் ரீங்காரம்

கருத்துகள் இல்லை: