சிறு பொழுது வாழ்வு
விளையாடி களிக்கும்
ஒளியில் விட்டில்
கிளை அமரும் பறவை
மர பாரம் குறைக்கும்
உதிரும் சருகுகள்
வெளிச்சென்றவரை நோக்க
விரைந்து வரும்
வீட்டிற்குள் வெள்ளம்
போர்கால அடிப்படையில் அமைச்சர்
தட்டில் வாரி இறைக்கிறாள்
குடிசையில் தண்ணீரை அம்மா
அன்றே கொல்வான் அரசன்
நின்று கொல்லும் தெய்வம்
தேங்கி கொல்லும் தண்ணீர்
காவலர் யாரும் இல்லை
கைது செய்யப்பட்டு இருக்கிறேன்
சுற்றி நிற்கிறது தண்ணீர்
இரசிக்க மனமில்லை
மழைக்குபின் வானவில்
அழுத்தும் நிலம் விற்றசோகம்
இல்லாத கவலை நிலம்
விற்ற பின் வருகிறது
நல்ல மழை
விளையாடி களிக்கும்
ஒளியில் விட்டில்
கிளை அமரும் பறவை
மர பாரம் குறைக்கும்
உதிரும் சருகுகள்
வெளிச்சென்றவரை நோக்க
விரைந்து வரும்
வீட்டிற்குள் வெள்ளம்
போர்கால அடிப்படையில் அமைச்சர்
தட்டில் வாரி இறைக்கிறாள்
குடிசையில் தண்ணீரை அம்மா
அன்றே கொல்வான் அரசன்
நின்று கொல்லும் தெய்வம்
தேங்கி கொல்லும் தண்ணீர்
காவலர் யாரும் இல்லை
கைது செய்யப்பட்டு இருக்கிறேன்
சுற்றி நிற்கிறது தண்ணீர்
இரசிக்க மனமில்லை
மழைக்குபின் வானவில்
அழுத்தும் நிலம் விற்றசோகம்
இல்லாத கவலை நிலம்
விற்ற பின் வருகிறது
நல்ல மழை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக