சனி, 30 டிசம்பர், 2017

ஆனந்தம்

o   உடுத்திக் கலையும் துகில்
உண்டு மகிழும் உணவு
சூடிகளிக்கும் மலர்
காண விரும்பும் மேனி
எல்லாம் எனக்கு ஆனந்தமாக
நீ
அம்பாலிகையா
அடக் கள்ளியா
நான்
ஆச்சாரியனா
அடியவனா
அன்பே அன்பே சொல்

உமக்கு என்னை
பழி வாங்குவதாய்
நினைப்பதில்

எமக்கோ
நீ பழிவாங்க
நான் இருக்கிறேன்
என்பதில்...


ஏமாற்றம்தான்
என்றாலும்
தினம் தினம்
எதிர்பார்த்துக்கிடக்கிறேன்

என் ஏமாற்றம்
உனக்கு
அளவிலா ஆனந்தம்
தரும் என்பதால்...

கருத்துகள் இல்லை: