வியாழன், 28 ஜனவரி, 2016

அஸ்தி

கண்குளிர பார்க்க ஆசை
காசி விஸ்வநாதனை
போனதோ செத்தபின் அஸ்தியாய்.

அஸ்தி

வாழும்வரை நிறைவேறவேயில்லை
காசி இராமேஷ்வரப் பயணம்
செத்தபின் போனது அஸ்தி.

அஸ்தி

கடலில் கரைத்த பின்னும்
கரையாமல் மேலெழும்
நெஞ்சில் நினைவுகள்.

புதன், 6 ஜனவரி, 2016

மழை

கால தாமதமாய்
வந்து பார்க்கும் காளான்
பெய்த மழை.

மழை

ஒன்று சேர்த்தது
சாதி மதம் மறந்து மனிதர்களை
பெய்த மழை

மழை

பெய்த மழை
வளர்த்து உள்ளது
மனித நேயம்.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

நன்றி

நன்றி சொன்னது
நீண்ட தூரம் பறந்தமர்ந்த பறவை
தலைவர் சிலைக்கு.