செவ்வாய், 21 ஏப்ரல், 2015

உன் நிலம்-என் இடம்

நீ
எனக்கானவன்
என் எண்ணம்
என் செயல்
எல்லாம் உனக்கானது

நீ
என்னுள் இருக்கிறாய்
எனக்கான எல்லாம்
உள்ளிருக்கும்
உனக்காகவானது

நீ
அறிவாயா
உபதேசித்த கண்ணன்
அர்ஜீனனிடம் சொன்னதை
எல்லாம் நான்
நானே எல்லாமும்

நீ என்று
தனித்து ஏது
உன் செயல் எல்லாம்
எனது செயல்
எனக்கான செயல்
என்னால் செய்யப்படும்
உன்செயல்

எதுவும் நீ அன்று
எதற்கும் நீ அன்று
நானும் அன்று

எல்லாம் அவன்
விளையாட்டில் நிகழ்பவை
என் இடம் நிலைக்க
உன் நிலம் இப்போது
கொடு
கவலை கொள்ளாதே

எது உனது
எதுவும் இல்லை
நாளை என்பதை
இன்றே பார்
வேறு ஒருவனுக்காவதை

இது
தர்மத்தின் காட்சி
மறுக்காதே ஏற்றுக்கொள்

உனது செயல்
எனது செயல்
எனக்கானசெயல்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மோ(ச)டி ஜாலம்

நிலத்தோடு போராட்டம்
ரொம்ப கஷ்டம்
நிலமின்றி போராடு
ஏழைகளுக்காக சிந்திக்கும்
அரசு நிலம் கையகப்படுத்தி
மோ(ச)டி ஜாலம்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

திரும்பும் மேகம்

தண்ணீராய் செலவு
இல்லை இல்லை
தண்ணீருக்கே பெரும் செலவு,

ஓடி ஒளியலாம்
இன்னும் சில நாளில்
யாரேனும் தண்ணீர் கேட்டு வருகையில்.

திரண்டு வந்து
திரும்பும் மேகம்
தகுந்த மரியாதை கிடைக்கவில்லையோ.

யாரைக் கண்ட மிரட்சி
வந்தவழியே
திரும்பிச் செல்கிறது மேகம்.

சொட்டு தண்ணீர்

கை பிடித்து நடக்கின்றார்
பிள்ளைகள் அன்று
தண்ணீர் பாட்டில்.

காத்திருக்கிறார்கள் எல்லோரும்
வி வி ஐ பி - ஆனது
மழை.

முந்நூறு நானூறு
பல நூறுக்கு பின்னுமில்லை
சொட்டுத் தண்ணீர்..