இங்கு
எல்லாமும் கிடைக்கும்
பணம் இருந்தால்
இரு நூறு ஐநூறு
போட்டி கடுமை என்றால்
சில ஆயிரங்கள் போதும்
வாக்காளனை
விலைக்கு வாங்கலாம்...
இது
சிலபல
லட்சங்களானால்
வேட்பாளனையே
விலை பேசலாம்
லட்சங்கள்
மேலும் கூடும்போது
வெற்றி பெற்றவரையேகூட
ஆதரவாளர் என்ற பேரில்
நம்மவர் ஆக்கி விடலாம்.
கோடிகளில்
பேரம் நடக்கையில்
சர்க்காரே சலாம் போடும்
கோடடீஸ்வர
முதலாளிகளுக்கு...
இங்கு
எவ்வளவு கொடுத்து
வாங்கப்படுகிறோம்
என்பதில் மட்டுமே
வேறுபாடு
சாமானியனுக்கும்
சர்க்காருக்குமானது....