ஒன்றுமட்டும் உண்மை
உன் சிலை மீது
எச்சமிடும் காக்கையையும்
விரட்டாத உன் கைத்தடி...
நடுவீதியில் நள்ளிரவில் அல்ல
பட்டப் பகலிலேயே
பாழ்படுத்தும் பெண்களையும்
காணாத கண்ணாடியென
இவர்கள்
அஞ்சாமல் இருக்கலாம்.
ஆனால் ஒருநாள்
அதுவும் வாய்பேசும்
அப்போது இவர்கள்
முகமூடி உடையும்
காவி தேச முயற்சி முறிந்து
காந்தி தேசம் நிலைக்கும்.
அனைத்திலும் அரசியல் அறிந்திடு
ஆதிக்க உணர்வை வெறுத்திடு
இல்லாதோர்க்காய் உழைத்திடு
ஈகை குணத்தை வளர்த்திடு
உண்மை உழைப்பை போற்றிடு
ஊழல் சூழல் போக்கிடு
எளிமை நெறியை கற்றிடு
ஏளனம் செய்தல் மறந்திடு
ஐக்கிய மாதல் உரைத்திடு
ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு
ஓய்தல் நீக்கி செயல்படு
ஓளடதம் நீயென எண்ணிடு
அஃதே அரசியலென மாற்றிடு.