இரவென்பது இருட்டாகாது
வெளிச்சம் உணரும்
மறுபக்கம்.
பகலைக் காட்டிலும்
இரவில் அதிகம்
புதிய தோன்றலும்
புதியதற்கெதிராய்
அழிதலும்.
இரவு சுகம்
இரவே வலி
இரவு நம்பிக்கை
இரவே அவமானம்
இரவு புதிர்
இரவே விடை
இரவு வரம்
இரவே சாபம்
இரவு வெற்றி
இரவே தோல்வி
நம்மை அறிய
நமக்கானதை அறிய
உதவும் இரவு
இரவைக் கொண்டாடு
இரவே எல்லாம்
பகலைவிட...