இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
நிலை
காணும் இடமெல்லாம் வன்முறை
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
திரும்புகிறது இயல்புநிலை.
வெளிப்பாடு
எத்தனைதான் முயற்சித்தாலும்
வெளிப்பட்டு விடுகிறது
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்.
சனி, 17 செப்டம்பர், 2016
பொய் விசாரணை
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதும் பொய் பொய்யே.
பசி
பசிதான் கடவுள்
நீண்ட வரிசையில் மனிதர்கள்
அன்னதானம் வழங்கும் கோயில்.
வெள்ளி, 16 செப்டம்பர், 2016
வருகை
நாளைய வருகையை
உறுதி செய்து சென்றது
சிறகை உதிர்த்து புறா.
வியாழன், 15 செப்டம்பர், 2016
பாரம்
மௌனமாய்
பார்த்திருந்தேன்
என்னையே
உற்று நோக்குவதாய்
எண்ணிக்கொண்டேன்
சிறிது நேரத்தில்
குரலெழுப்பி
பறந்து மறைந்தது
கிளி.
பார்த்துக்கொண்ட
கனப்பொழுதில்
உள்வாங்கிக்கொண்டோம்
ஒருவருக்கொருவர்
மனபாரம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)