- ஆயிரம் ஐநூறு நோட்டு
செல்லுபடியாகும் இடுகாட்டில்
பணமெனில் பிணமும் வாய்திறக்கும்.
வியாழன், 29 டிசம்பர், 2016
புதன், 28 டிசம்பர், 2016
திங்கள், 26 டிசம்பர், 2016
மணல் வீடு
1. மணல் வீடு கட்டி கைதட்டி குடிபுகும் குழந்தை. 2. தன் பசிக்கு ஒன்றுமில்லை தெரு பிள்ளைகளுக்கு மண்சோறு போடும் குழந்தை. 3. மரபாச்சி பொம்மை புது துணி கட்டினாள் தன் கிழிந்த பாவாடை மறந்து. 4. கொஞ்சநேர விளையாட்டு சண்டையும் சமாதானமும் நடக்கும் மணல் வீடு. 5. வீடு கட்டும் விளையாட்டு சேர்க்க மறுக்கும் அக்கா ஏக்கத்தில் வாடும் பாப்பா. 6. கலைந்தபோதே கலைந்தது கண்ட கனவுகள் மணல் வீடு. 7. பல அடுக்குகள் கட்டி முடித்தால் கனவில் மணல் வீடு. 8. கட்டி முடித்த மணல்வீடு போட்டி நடந்தது கோலம் போடுவது யார்? 9. பெய்யும் மழை ஏக்கத்தில் குழந்தை கட்டிய மணல்வீடு. 10. தேடி அலையும் குழந்தை நேற்று விளையாட்டு கட்டிய மணல்வீடு.
வெள்ளி, 23 டிசம்பர், 2016
கருப்பு
கருப்பு
சிலருக்கு நிறம்
கருப்பு
சிலருக்கு துக்கம்
கருப்பு
சிலருக்கு ஆகாதது
கருப்பு
சிலருக்கு வெறுப்பு
கருப்பு
எங்களின் அடையாளம்
கருப்பு
எங்களின் வாழ்க்கை
கருப்பு
எங்களின் வலி
கருப்பு
எங்களின் உயிர்
நாங்கள்
கருப்பர்கள்
உலகம் முழுதும்
உள்ள உழைப்பாளிகள்.
இருப்பு
இருக்க வேண்டிய இடத்தில்
இருக்கு சில
இருக்கக் கூடாதது
இருக்க வேண்டிய சில
இல்லாமல் இருக்கிறது.
இருக்கு சில
இருக்கக் கூடாதது
இருக்க வேண்டிய சில
இல்லாமல் இருக்கிறது.
வெள்ளி, 11 நவம்பர், 2016
புதன், 9 நவம்பர், 2016
செவ்வாய், 8 நவம்பர், 2016
திங்கள், 7 நவம்பர், 2016
திங்கள், 31 அக்டோபர், 2016
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
ஞாயிறு, 23 அக்டோபர், 2016
பிள்ளை முகம்
ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...
இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு
எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா
பிள்ளை முகம்
வெள்ளி, 14 அக்டோபர், 2016
என்னைப்பற்றி
யார் யாரோ அறிந்திருக்கிறார்கள்
என்னைப் பற்றியும்
எனக்கானவை பற்றியும்.
நடை உடை
மூக்கு முழி
இப்படி சிலர்.
பழக்க வழக்கம்
பேச்சு உணவு
இப்படி சிலர்.
நல்லவன் கெட்டவன்
இல்லை ஏமாளி
இப்படி சிலர்.
இன்னும் சில
சொல்ல முடிந்த
சொல்ல முடியாதபடி...
அறிந்திருக்கிறார்கள்
என்னையும்
எனக்கானவையையும்
எனக்குத்தான்
தெரியவில்லை சரியாய்
என்னைப்பற்றி.
என்னைப் பற்றியும்
எனக்கானவை பற்றியும்.
நடை உடை
மூக்கு முழி
இப்படி சிலர்.
பழக்க வழக்கம்
பேச்சு உணவு
இப்படி சிலர்.
நல்லவன் கெட்டவன்
இல்லை ஏமாளி
இப்படி சிலர்.
இன்னும் சில
சொல்ல முடிந்த
சொல்ல முடியாதபடி...
அறிந்திருக்கிறார்கள்
என்னையும்
எனக்கானவையையும்
எனக்குத்தான்
தெரியவில்லை சரியாய்
என்னைப்பற்றி.
புதன், 12 அக்டோபர், 2016
கதைப்பு....
நெடுநாளைக்குப்பின்
நிகழ்ந்தது இச்சந்திப்பு
இருவருக்குமிடையில்
பரிமாற்றமானது
சூடான விவாதங்கள்.
அன்றாட நடப்புகள்
கதைப்பில்
அதிகம் இடம்பிடித்தது.
காவிரி கலவரம்
மேலாண் வாரியம்
முதல்வரின் உடல்நிலை என
நடப்புகளை பேசி முடிக்கையில்
கொஞ்சம்
இலக்கியமும் இடைப்பட்டது
தி.ஜா படிச்சிருப்பே
மோக முள் போல்
இன்னைக்கு சொல்லமுடியலே
என்றவரிடம்
என்னை ஈர்த்த
மரப்பசுவும் அம்மா வந்தாளும்
இடம் பிடித்தது.
தி.ஜா வை தம் சிறுகதைக்குள்
பெண்மன ஓட்டத்தை சொல்வதில்
மிஞ்சிவிட்டார்
கு.பா.ரா-என்றதும்
எல்லாம் அவரது
ராங்கி நெனப்பு
கவிதைக்கு பின்னாடி என்றார்.
பெண்கள் எழுத்து
என திசைமாறியபோது
என்னமாய் சொல்லிவிட்டார்
மனிதர் கந்தர்வன்
“ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை”-என்று.
இப்பவும் கவிதைங்க
பிச்சமூர்த்தியின்
காட்டுவாத்துகள்
ஆத்துமணலில் நடந்த
காலடித்தடம் போல
ஒன்னும் புரிய....
இன்றைக்கும்
எத்தனையோ வருது
யாருக்கு சொல்லை
காய்ச்சி வடிக்க வருது
கவிதை என்றார்.
அத்தனையும்
ஒன்றுவிடாமல்
எங்களுக்கிடையே ஆனவைகளைக்
கேட்டு கொதிப்படங்கிக்
கொண்டிருந்தது
இருக்குமிடையில்
மேசை மீதிருந்த
தேநீர் கோப்பைகள் ரெண்டும்.
நிகழ்ந்தது இச்சந்திப்பு
இருவருக்குமிடையில்
பரிமாற்றமானது
சூடான விவாதங்கள்.
அன்றாட நடப்புகள்
கதைப்பில்
அதிகம் இடம்பிடித்தது.
காவிரி கலவரம்
மேலாண் வாரியம்
முதல்வரின் உடல்நிலை என
நடப்புகளை பேசி முடிக்கையில்
கொஞ்சம்
இலக்கியமும் இடைப்பட்டது
தி.ஜா படிச்சிருப்பே
மோக முள் போல்
இன்னைக்கு சொல்லமுடியலே
என்றவரிடம்
என்னை ஈர்த்த
மரப்பசுவும் அம்மா வந்தாளும்
இடம் பிடித்தது.
தி.ஜா வை தம் சிறுகதைக்குள்
பெண்மன ஓட்டத்தை சொல்வதில்
மிஞ்சிவிட்டார்
கு.பா.ரா-என்றதும்
எல்லாம் அவரது
ராங்கி நெனப்பு
கவிதைக்கு பின்னாடி என்றார்.
பெண்கள் எழுத்து
என திசைமாறியபோது
என்னமாய் சொல்லிவிட்டார்
மனிதர் கந்தர்வன்
“ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை”-என்று.
இப்பவும் கவிதைங்க
பிச்சமூர்த்தியின்
காட்டுவாத்துகள்
ஆத்துமணலில் நடந்த
காலடித்தடம் போல
ஒன்னும் புரிய....
இன்றைக்கும்
எத்தனையோ வருது
யாருக்கு சொல்லை
காய்ச்சி வடிக்க வருது
கவிதை என்றார்.
அத்தனையும்
ஒன்றுவிடாமல்
எங்களுக்கிடையே ஆனவைகளைக்
கேட்டு கொதிப்படங்கிக்
கொண்டிருந்தது
இருக்குமிடையில்
மேசை மீதிருந்த
தேநீர் கோப்பைகள் ரெண்டும்.
வெள்ளி, 7 அக்டோபர், 2016
மனப் பறவை
பறவைகளுடனான உலகம்
அலாதியானது
விந்தை நிறைந்தது.
பறவைகளின் மொழிதலில்
ஆயிரமாயிரம்
பொருள்கள்.
ஒவ்வொரு சிறகசைப்பிலும்
விரிந்து கொள்ளும்
ஓர் புதிய உலகம்.
“க்விச்” ஒலி எழுப்பி
செல்கையில்
சிறகு கட்டிக் கொள்ளும்.
வனாந்தர வெளிகளில்
அலைந்து திரிந்து
கூடு திரும்பும்
மனப் பறவை
நாளும்.
அலாதியானது
விந்தை நிறைந்தது.
பறவைகளின் மொழிதலில்
ஆயிரமாயிரம்
பொருள்கள்.
ஒவ்வொரு சிறகசைப்பிலும்
விரிந்து கொள்ளும்
ஓர் புதிய உலகம்.
“க்விச்” ஒலி எழுப்பி
செல்கையில்
சிறகு கட்டிக் கொள்ளும்.
வனாந்தர வெளிகளில்
அலைந்து திரிந்து
கூடு திரும்பும்
மனப் பறவை
நாளும்.
சனி, 1 அக்டோபர், 2016
பெயர்
பெயர்
இல்லாமல் இருக்கலாம்
இல்லாத வரையில்
எதுவுமில்லை
ராமன் என்றால் இந்து
ரஹீம் என்றால் முஸ்லீம்
ராபர்ட் என்றால் கிருத்து
வெறும்
மனிதன் என்பதற்கு
என்ன
பெயர்.
இல்லாமல் இருக்கலாம்
இல்லாத வரையில்
எதுவுமில்லை
ராமன் என்றால் இந்து
ரஹீம் என்றால் முஸ்லீம்
ராபர்ட் என்றால் கிருத்து
வெறும்
மனிதன் என்பதற்கு
என்ன
பெயர்.
எடுப்பாய்
அளவாய்
தேர்ந்தெடுத்தார் போல
எடுப்பாய்
எல்லாம் இருக்கு
உனக்கு
இதுபோல்
இப்படி சொல்ல
எதுவும் இல்லை
எனக்கு.
(*விக்கிரமாதித்தன்-அவர்களுக்கு)
தேர்ந்தெடுத்தார் போல
எடுப்பாய்
எல்லாம் இருக்கு
உனக்கு
இதுபோல்
இப்படி சொல்ல
எதுவும் இல்லை
எனக்கு.
(*விக்கிரமாதித்தன்-அவர்களுக்கு)
அனுபவ சேகரிப்பு
நேற்றைய தினம்
எதிர்பாராமல் நிகழ்ந்தது
நெடுநாளைக்குப்பிறகு
எங்களுக்கான
சந்திப்பு.
சந்திப்பின் ஊடாய்
விரிவடைந்து சென்றது
ஆல விருட்சமாய்
பால்ய நினைவுகள்.
ஐந்தாம்வகுப்பில் இருந்தபோது
ஊர் கம்மாய்
நிறைந்தோட
அம்மாணமாய் குளித்தகாட்சி
அவள் பார்த்துவிட்டாளென
வகுப்பறையில்
நாளெல்லாம்
சொல்லிச்சிரிச்ச
ரெஜினாவையும்
விட்டுவைக்கவில்லை
எங்களின் பேச்சு...
தினம்வீட்டுப்பாடம்
செய்த அவனுக்கும்
ஒரு பிலேட்டும் -சிலேட்டுமாய்
இருந்த எனக்குமான வாழ்க்கை
மாறாட்டம்
இன்னும் அவன்
ஒரு நிரந்தர
வேலைக்கு அல்லாடுவதும்
என்னையும் சொல்லி
மனபாரம் ஆறியது.
மீண்டும்
ஒரு இடைவெளியில்
சந்திக்கும் வரை
சேகரிக்க வேண்டும்
பரிமாறிக்கொள்ள
விதவிதமான
அனுபவங்களை...
எதிர்பாராமல் நிகழ்ந்தது
நெடுநாளைக்குப்பிறகு
எங்களுக்கான
சந்திப்பு.
சந்திப்பின் ஊடாய்
விரிவடைந்து சென்றது
ஆல விருட்சமாய்
பால்ய நினைவுகள்.
ஐந்தாம்வகுப்பில் இருந்தபோது
ஊர் கம்மாய்
நிறைந்தோட
அம்மாணமாய் குளித்தகாட்சி
அவள் பார்த்துவிட்டாளென
வகுப்பறையில்
நாளெல்லாம்
சொல்லிச்சிரிச்ச
ரெஜினாவையும்
விட்டுவைக்கவில்லை
எங்களின் பேச்சு...
தினம்வீட்டுப்பாடம்
செய்த அவனுக்கும்
ஒரு பிலேட்டும் -சிலேட்டுமாய்
இருந்த எனக்குமான வாழ்க்கை
மாறாட்டம்
இன்னும் அவன்
ஒரு நிரந்தர
வேலைக்கு அல்லாடுவதும்
என்னையும் சொல்லி
மனபாரம் ஆறியது.
மீண்டும்
ஒரு இடைவெளியில்
சந்திக்கும் வரை
சேகரிக்க வேண்டும்
பரிமாறிக்கொள்ள
விதவிதமான
அனுபவங்களை...
வழிந்தோடும்...
அறையை சுருள்சுருளாய்
சுற்றி அலைகிறது
வெண்புகை.
உபயம் செய்தது
அலைந்து திரிய
மின் விசிறி.
நிறைமாதமாய்
மாற்றிக்கொண்டது
ஆஸ்ட்ரே.
புகைவெளியெங்கும்
அலைகிறார்கள்
வீடெங்கும்
தேவதைகள்
புன்னகை புரிந்தபடி.
அவர்களின் அசைவை
ரசித்துக்கொண்டிருக்கிறோம்
இருக்கையில்
அமர்ந்தநிலையில்
நானும்
மேசையில் இருக்கும்
மது குப்பியும்.
எங்களுக்குள்
இன்னதென்று
சொல்லிக்கொள்ள முடியா
ஆனந்தம்
வழிந்தோடுகிறது
இரவெல்லாம்
தினம்தினம்.
சுற்றி அலைகிறது
வெண்புகை.
உபயம் செய்தது
அலைந்து திரிய
மின் விசிறி.
நிறைமாதமாய்
மாற்றிக்கொண்டது
ஆஸ்ட்ரே.
புகைவெளியெங்கும்
அலைகிறார்கள்
வீடெங்கும்
தேவதைகள்
புன்னகை புரிந்தபடி.
அவர்களின் அசைவை
ரசித்துக்கொண்டிருக்கிறோம்
இருக்கையில்
அமர்ந்தநிலையில்
நானும்
மேசையில் இருக்கும்
மது குப்பியும்.
எங்களுக்குள்
இன்னதென்று
சொல்லிக்கொள்ள முடியா
ஆனந்தம்
வழிந்தோடுகிறது
இரவெல்லாம்
தினம்தினம்.
கனவில்...
யானைகள் எல்லாம்
பூனைக்கு சேவகம் புரிகின்றன
காக்கைகள் ஜதி சொல்கிறது
குயில்களுக்கு.
கழுதைகள் ஒன்றுகூடி
ஒருமனதாய் தீர்மானம்
இயற்றிக்கொண்டன
தாங்களே
உலகின் இன்னிசைக்காவலர்கள்.
பூக்களுக்கு இருந்துவந்த
மதிப்பும் மரியாதையும்
இடமாற்றம் கண்டது
இனி எங்கும் முட்கள்.
காலம் மாறிவிட்டது
பகலில் துயில்கொண்டு
இரவில் உலா
எல்லாம் நேற்றைய கனவில்...
பூனைக்கு சேவகம் புரிகின்றன
காக்கைகள் ஜதி சொல்கிறது
குயில்களுக்கு.
கழுதைகள் ஒன்றுகூடி
ஒருமனதாய் தீர்மானம்
இயற்றிக்கொண்டன
தாங்களே
உலகின் இன்னிசைக்காவலர்கள்.
பூக்களுக்கு இருந்துவந்த
மதிப்பும் மரியாதையும்
இடமாற்றம் கண்டது
இனி எங்கும் முட்கள்.
காலம் மாறிவிட்டது
பகலில் துயில்கொண்டு
இரவில் உலா
எல்லாம் நேற்றைய கனவில்...
பொய்-உண்மை
கவனமாய் கேளுங்கள்
பொதுவான கவனிப்பு
போதாது என்றே கொள்ளுங்கள்
பின் வருந்த நேரிடலாம்
சற்றே கூடுதல் கவனம்
என்சொல்
எல்லாம் பொய்
பொய் என்றால்
பொய்மட்டுமில்லை
உண்மையும் கூட
அதற்காக
எல்லாம் உண்மை
என்று எண்ணிவிடாதீர்
கொஞ்சம் பொய்யும்கூட.
முழுதும் பொய்யோ
முழுதும் மெய்யோ
யாரிடமிருக்கிறது
யாரையும்யாரிடமும்
வெறும் உண்மையென்றும்
வெறும் பொய்யென்றும்
இருக்க விடுவதில்லை
எப்படியும்
கலந்துவிடுகிறது
உண்மைக்குள் ஒரு பொய்யும்
பொய்க்குள் ஒரு உண்மையும்
தேடிக் கண்டேன்
உண்மையை என்பதும்
உண்மையுமல்ல
தேடாது விட்டேன்
என்பது
பொய்யுமல்ல.
உண்மையும் பொய்யுமாய்
தான் நகருகிறது
பொழுதுகள்
இங்கிருக்கும் எல்லாருக்கும்.
இலைமறை காய்போல்
பொய்மறை உண்மை
பொதுவான கவனிப்பு
போதாது என்றே கொள்ளுங்கள்
பின் வருந்த நேரிடலாம்
சற்றே கூடுதல் கவனம்
என்சொல்
எல்லாம் பொய்
பொய் என்றால்
பொய்மட்டுமில்லை
உண்மையும் கூட
அதற்காக
எல்லாம் உண்மை
என்று எண்ணிவிடாதீர்
கொஞ்சம் பொய்யும்கூட.
முழுதும் பொய்யோ
முழுதும் மெய்யோ
யாரிடமிருக்கிறது
யாரையும்யாரிடமும்
வெறும் உண்மையென்றும்
வெறும் பொய்யென்றும்
இருக்க விடுவதில்லை
எப்படியும்
கலந்துவிடுகிறது
உண்மைக்குள் ஒரு பொய்யும்
பொய்க்குள் ஒரு உண்மையும்
தேடிக் கண்டேன்
உண்மையை என்பதும்
உண்மையுமல்ல
தேடாது விட்டேன்
என்பது
பொய்யுமல்ல.
உண்மையும் பொய்யுமாய்
தான் நகருகிறது
பொழுதுகள்
இங்கிருக்கும் எல்லாருக்கும்.
இலைமறை காய்போல்
பொய்மறை உண்மை
அடையாளம்
ஒன்றாகவே இருக்க வேண்டும்
என்றில்லை
ஒன்றாக இல்லாமல் இருப்பதே
கண்டறிய உதவுகிறது.
அடையாளம்.
குரலில் காணலாம் சிலரை
உருவத்தில் அறியலாம் வேறுசிலரை
பழக்க வழக்கங்களும்
காட்டிக்கொடுக்கும் சிலரை
மூக்குப்பொடி அண்ணாவிற்கு-அடுக்கி
முழங்குவது கலைஞருக்கு-வார்த்தை
முழுங்குவது நாவலருக்கு-இவை
முழுதும் சொல்லுவது கவிஞருக்கு.
சாய்வு நாற்காலி என்றால்
சிலருக்கு சில ஞாபகம்
சாம்பாரும் சட்டினியும்கூட
சாயலறிய உதவுகிறது.
பாதரட்சையும்
பயனானது
பாரதமும் இராமாயணமும்
அறிந்துகொள்ள.
வெவ்வேறான அடையாளங்கள்
தீர்மானம் ஆகிறது
எனக்கெது
அறிந்தவர் யார்?
சொல்வீர்
அடையாளம்...
என்றில்லை
ஒன்றாக இல்லாமல் இருப்பதே
கண்டறிய உதவுகிறது.
அடையாளம்.
குரலில் காணலாம் சிலரை
உருவத்தில் அறியலாம் வேறுசிலரை
பழக்க வழக்கங்களும்
காட்டிக்கொடுக்கும் சிலரை
மூக்குப்பொடி அண்ணாவிற்கு-அடுக்கி
முழங்குவது கலைஞருக்கு-வார்த்தை
முழுங்குவது நாவலருக்கு-இவை
முழுதும் சொல்லுவது கவிஞருக்கு.
சாய்வு நாற்காலி என்றால்
சிலருக்கு சில ஞாபகம்
சாம்பாரும் சட்டினியும்கூட
சாயலறிய உதவுகிறது.
பாதரட்சையும்
பயனானது
பாரதமும் இராமாயணமும்
அறிந்துகொள்ள.
வெவ்வேறான அடையாளங்கள்
தீர்மானம் ஆகிறது
எனக்கெது
அறிந்தவர் யார்?
சொல்வீர்
அடையாளம்...
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
சனி, 17 செப்டம்பர், 2016
வெள்ளி, 16 செப்டம்பர், 2016
வியாழன், 15 செப்டம்பர், 2016
பாரம்
மௌனமாய்
பார்த்திருந்தேன்
என்னையே
உற்று நோக்குவதாய்
எண்ணிக்கொண்டேன்
சிறிது நேரத்தில்
குரலெழுப்பி
பறந்து மறைந்தது
கிளி.
பார்த்துக்கொண்ட
கனப்பொழுதில்
உள்வாங்கிக்கொண்டோம்
ஒருவருக்கொருவர்
மனபாரம்.
பார்த்திருந்தேன்
என்னையே
உற்று நோக்குவதாய்
எண்ணிக்கொண்டேன்
சிறிது நேரத்தில்
குரலெழுப்பி
பறந்து மறைந்தது
கிளி.
பார்த்துக்கொண்ட
கனப்பொழுதில்
உள்வாங்கிக்கொண்டோம்
ஒருவருக்கொருவர்
மனபாரம்.
சனி, 13 ஆகஸ்ட், 2016
புதன், 10 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
சனி, 6 ஆகஸ்ட், 2016
சம்சாரி-1
டெமக்கிரான் நிமக்கிரான்
பாலிடாயில்
வாங்கி அடிச்சா
சாகுமோ சாகாதோ பூச்சி
சத்தியமா சாவான்
சம்சாரி
வாங்கின கடனுக்கு.
பாலிடாயில்
வாங்கி அடிச்சா
சாகுமோ சாகாதோ பூச்சி
சத்தியமா சாவான்
சம்சாரி
வாங்கின கடனுக்கு.
ஞாயிறு, 31 ஜூலை, 2016
புதன், 27 ஜூலை, 2016
செவ்வாய், 19 ஜூலை, 2016
நீ...
இல்லை என்பது
நிஜம்தான் என்றாலும்
நம்ப மறுக்கும் மனம்
நினைவு சலனங்களால்...
காற்றிலாடும் கதவும்
கயிற்றிலாடும் துணியும்
மனதில் ஆடும்
நீ என...
பூனையும்
நாயும் கூட
முடங்கிக் கிடக்கிறது
நீ இல்லாத வீட்டில்...
கவிழ்க்கப்பட்டு கிடப்பது
வெறும் பாத்திரங்கள்
மட்டுமல்ல
நீ இல்லா வீட்டில்
நானும்....
நீயே நானெ ஆனபின்
இல்லாமல் மறைகிறேன்
நானும்
நீ இல்லாத நாட்களில்...
சனி, 9 ஜூலை, 2016
சனி, 2 ஜூலை, 2016
புதன், 29 ஜூன், 2016
செவ்வாய், 28 ஜூன், 2016
சனி, 28 மே, 2016
விலை பொருள்
இங்கு
எல்லாமும் கிடைக்கும்
பணம் இருந்தால்
இரு நூறு ஐநூறு
போட்டி கடுமை என்றால்
சில ஆயிரங்கள் போதும்
வாக்காளனை
விலைக்கு வாங்கலாம்...
இது
சிலபல
லட்சங்களானால்
வேட்பாளனையே
விலை பேசலாம்
லட்சங்கள்
மேலும் கூடும்போது
வெற்றி பெற்றவரையேகூட
ஆதரவாளர் என்ற பேரில்
நம்மவர் ஆக்கி விடலாம்.
கோடிகளில்
பேரம் நடக்கையில்
சர்க்காரே சலாம் போடும்
கோடடீஸ்வர
முதலாளிகளுக்கு...
இங்கு
எவ்வளவு கொடுத்து
வாங்கப்படுகிறோம்
என்பதில் மட்டுமே
வேறுபாடு
சாமானியனுக்கும்
சர்க்காருக்குமானது....
எல்லாமும் கிடைக்கும்
பணம் இருந்தால்
இரு நூறு ஐநூறு
போட்டி கடுமை என்றால்
சில ஆயிரங்கள் போதும்
வாக்காளனை
விலைக்கு வாங்கலாம்...
இது
சிலபல
லட்சங்களானால்
வேட்பாளனையே
விலை பேசலாம்
லட்சங்கள்
மேலும் கூடும்போது
வெற்றி பெற்றவரையேகூட
ஆதரவாளர் என்ற பேரில்
நம்மவர் ஆக்கி விடலாம்.
கோடிகளில்
பேரம் நடக்கையில்
சர்க்காரே சலாம் போடும்
கோடடீஸ்வர
முதலாளிகளுக்கு...
இங்கு
எவ்வளவு கொடுத்து
வாங்கப்படுகிறோம்
என்பதில் மட்டுமே
வேறுபாடு
சாமானியனுக்கும்
சர்க்காருக்குமானது....
செவ்வாய், 24 மே, 2016
புதன், 18 மே, 2016
புதன், 13 ஏப்ரல், 2016
வெள்ளி, 4 மார்ச், 2016
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
திங்கள், 22 பிப்ரவரி, 2016
வியாழன், 28 ஜனவரி, 2016
புதன், 6 ஜனவரி, 2016
செவ்வாய், 5 ஜனவரி, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)