இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
திங்கள், 29 செப்டம்பர், 2014
வருவாய்
எது எப்படியோ
கண்ணுக்கு தெரிந்து
130 கோடி இந்தியாவுக்கு வருமானம்
மழைக் காளான்
இயற்கை விரித்த குடை
இளைப்பாறும் எறும்பு
மழைக் காளான்
திங்கள், 22 செப்டம்பர், 2014
ஆவின்
அதிக தைரியம் பிறந்தது
அன்னம் மறைந்ததால்
ஆவின் பாலில் கலப்படம்
ஞாயிறு, 21 செப்டம்பர், 2014
நாகரீகம்
நீ எப்படி வேண்டுமானாலும் இரு
எனக்கொன்றும் இல்லை
நீ உன் நாகரீகம் இழக்காதவரை.
வித்தியாசம்
சுமக்க நாலு பேர்
இருந்தும் வித்தியாசம்
பல்லக்கு - பாடைக்கு
விருப்பம்
நிறைய பளிங்குகற்கள்
இருந்தும் விருப்பமில்லை
உனை இழந்து தாஜ்மஹால் எழுப்ப.
சனி, 20 செப்டம்பர், 2014
மழை-மரம்
ரசித்துக் கொண்டிருந்தேன்
மழையில் நனையும் மரம்
அதனடியில் ஒதுங்கி நின்று.
இசை
நல்ல இசை
தொடர்ந்து தருகிறது
ஓட்டை புல்லாங்குழல்
திங்கள், 8 செப்டம்பர், 2014
அன்னபூரணி
அவள்
தினம் தினம்
பத்து பதினைந்து பேருக்கு
படியளப்பவள் இல்லை
அன்றாட பிழைப்புக்கே
நீண்ட வரிசையில்
காத்துக்கிடக்கிறாள்...
அமுதம் அங்காடியில்
ஆனாலும் அவள் பெயர்
அன்னபூரணி....
வியாழன், 4 செப்டம்பர், 2014
கரையெண்ணி
உள்ளம் கொள்ளை போகுது
இந்தியாவின் விடாப்பிடியான
கரையெல்லாம்
போக்குதாம் ஏரீல்
கேட்கும் போதெல்லாம்
போக்கவே முடியாமல்
படிந்துகிடக்கும் ஊழல்
கரையெண்ணி...
புதன், 3 செப்டம்பர், 2014
பிள்ளையார்
விற்ற பிள்ளையார்க்கு எல்லாம்கிடைக்க
உண்ணாவிரதம் இருப்பவர் போல் பாவம்
விற்காமல் கிடக்கும்பிள்ளையார்கள்
உலகை காக்கும் பிள்ளையார்
விஸ்வரூப தோற்றம் கொள்ள
அவரைக்காக்க ஐந்தாறு போலீஸ்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)