திங்கள், 29 செப்டம்பர், 2014

வருவாய்

எது எப்படியோ
கண்ணுக்கு தெரிந்து
130 கோடி இந்தியாவுக்கு வருமானம்

மழைக் காளான்

இயற்கை விரித்த குடை
இளைப்பாறும் எறும்பு
மழைக் காளான்

திங்கள், 22 செப்டம்பர், 2014

ஆவின்

அதிக தைரியம் பிறந்தது
அன்னம் மறைந்ததால்
ஆவின் பாலில் கலப்படம்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

நாகரீகம்

நீ எப்படி வேண்டுமானாலும் இரு
எனக்கொன்றும் இல்லை
நீ உன் நாகரீகம் இழக்காதவரை.

வித்தியாசம்

சுமக்க நாலு பேர்
இருந்தும் வித்தியாசம்
பல்லக்கு - பாடைக்கு

விருப்பம்

நிறைய பளிங்குகற்கள்
இருந்தும் விருப்பமில்லை
உனை இழந்து தாஜ்மஹால் எழுப்ப.

சனி, 20 செப்டம்பர், 2014

மழை-மரம்

ரசித்துக் கொண்டிருந்தேன்
மழையில் நனையும் மரம்
அதனடியில் ஒதுங்கி நின்று.

இசை

நல்ல இசை
தொடர்ந்து தருகிறது
ஓட்டை புல்லாங்குழல்

திங்கள், 8 செப்டம்பர், 2014

அன்னபூரணி

அவள் 
தினம் தினம்
பத்து பதினைந்து பேருக்கு
படியளப்பவள் இல்லை
அன்றாட பிழைப்புக்கே
நீண்ட வரிசையில்
காத்துக்கிடக்கிறாள்...
அமுதம் அங்காடியில்
ஆனாலும் அவள் பெயர்
அன்னபூரணி....

வியாழன், 4 செப்டம்பர், 2014

கரையெண்ணி

உள்ளம் கொள்ளை போகுது

இந்தியாவின் விடாப்பிடியான
கரையெல்லாம்
போக்குதாம் ஏரீல்
கேட்கும் போதெல்லாம்
போக்கவே முடியாமல்
படிந்துகிடக்கும் ஊழல்
கரையெண்ணி...

புதன், 3 செப்டம்பர், 2014

பிள்ளையார்

விற்ற பிள்ளையார்க்கு எல்லாம்கிடைக்க
உண்ணாவிரதம் இருப்பவர் போல் பாவம்
விற்காமல் கிடக்கும்பிள்ளையார்கள்

உலகை காக்கும் பிள்ளையார்
விஸ்வரூப தோற்றம் கொள்ள
அவரைக்காக்க ஐந்தாறு போலீஸ்