இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
திங்கள், 31 ஜூலை, 2017
கைது
இன்னும் கைது செய்யவில்லை
நம்புகிறார்கள் என்னை
அரசை நேசிப்பவன்
துயரம்
எத்தனை துயரம் மனதில்
வாங்கிக்கொள்கிறது
தொட்டி பூச்செடி
அஞ்சலி
அஞ்சலி செலுத்த போட்ட
மாலை செலுத்துகிறது
ஒவ்வொன்றாய் உதிர்ந்து அஞ்சலி
ஓய்வு
விருப்ப ஓய்வுக்குவழியில்லை
அகவை முடிந்தும் வரவில்லை
ஓய்வு கீரைக்காரி பாட்டி
இராம.சுடர்க்கொடி
சித்தாள்
ஜலித்துக் கொண்டிருக்கிறாள்
மேஸ்திரியின் வசவுகளையும்
மணல் ஜலிக்கும் சித்தாள்
பாரம்
சுகமாய் இழுக்கிறான்
அதிக பாரத்தையும்
குடும்ப பார வண்டிக்காரன்
எறும்பு
தேன் உண்ட எறும்புகள்
இளைப்பாற உதவும்
உதிர்ந்த இதழ்கள்
பயணம்
நெடுந்தொலைவு தூரம்
மகிழ்வாய் தொடங்குகிறார்
நடை வண்டி பயணம்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)