செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொய் முகங்கள்

 மகிழ்ந்து சிரிக்க ஒன்று
பொய்யாய்
சிரித்து மழுப்ப மற்றொன்று
குமுறி அழுதிட ஒன்று
போலியாய்
நீலி கண்ணீர் வடிக்க மற்றொன்று

பரிவு காட்டிட ஒன்று
பாசாங்கு செய்திட மற்றொன்று
பணிவு செய்ய ஒன்று
பாய்ந்து குதற மற்றொன்று

வேண்டிப் பெற்றிட ஒன்று
பெற்றதை ம(றை)றக்க மற்றொன்று
கூடி பேசிட ஒன்று
குரூரம் வளர்த்திட மற்றொன்று

கண்டு பதைத்திட ஒன்று
காணாதிருந்திட மற்றொன்று
கனிந்து உருகிட ஒன்று
கல்லாய் இறுகிட மற்றொன்று

ஆயிரமாயிரம் முகங்கள்
நொடியில் மாறிட
உண்மை முகம்
உணரும் தருணம்....?

கருத்துகள் இல்லை: