சனி, 24 ஜனவரி, 2015

மறதியின் நாயகர்கள்

நேற்று அதை
மறந்தோம்
இன்று இதை
மறந்தோம்
நாளை
எதை....?
மறப்போம்...

நேரு சொன்னார்
எலி கறி சாப்பிட...
அவர் மகள் சொன்னார்
வறுமையே வெளியேறு
அவர் பிள்ளைக்கோ
நவீன இந்தியா....

அடுத்தவர் சொன்னார்
ஆண்மை வெளிப்பட்டதென
அவரின் சீடர்
நூறுநாளில்
கருப்பு பணம் வெளியில்

எல்லாம்
மறந்தோம்
இன்னும் மறப்போம்
நாளை
அமெரிக்க அதிபர்
ஏதேனும் சொல்வார்
அதையும்....

நாம்
என்றும்
என்றென்றும்
மறதியின் நாயகர்கள்

கருத்துகள் இல்லை: