செவ்வாய், 19 ஜூலை, 2016

நீ...



இல்லை என்பது
நிஜம்தான் என்றாலும்
நம்ப மறுக்கும் மனம்
நினைவு சலனங்களால்...

காற்றிலாடும் கதவும்
கயிற்றிலாடும் துணியும்
மனதில் ஆடும்
நீ என...

பூனையும்
நாயும் கூட
முடங்கிக் கிடக்கிறது
நீ இல்லாத வீட்டில்...

கவிழ்க்கப்பட்டு கிடப்பது
வெறும் பாத்திரங்கள்
மட்டுமல்ல
நீ இல்லா வீட்டில்
நானும்....


நீயே நானெ ஆனபின்
இல்லாமல் மறைகிறேன்
நானும்
நீ இல்லாத நாட்களில்...

கருத்துகள் இல்லை: