ஞாயிறு, 5 மார்ச், 2017

பாரம்

எழுதிக் கொண்டிருந்தேன்
ஒவ்வொன்றாய்
சொல்லச்சொல்ல
கொஞ்ச நேரத்திலேயே
கனத்தது கவிதை
அதற்கு மேல்
தாங்காது என்றானது
அத்தனை துயரங்கள்...
அவள் சொல்
எப்படித்தான்
தாங்கிக் கிடக்கிறதோ?

கருத்துகள் இல்லை: