ஞாயிறு, 28 ஜூலை, 2013

கனவுகளுக்கு இடையில்...

கண் விழித்து
நீர் தெளித்து
பத்துப் பாத்திரம் தேய்த்து
காப்பி போட்டு
பிள்ளைகளை எழுப்பி
கால் தொட்டு வணங்கி
காப்பி தந்து
அவசர அவசரமாய்
சமைத்து
பள்ளி அனுப்பி
அலுவலகம் கை அசைத்து
சென்று திரும்பி
மீள இயங்கத் தொடங்கி
அவசர கதியில்
கழிந்து போகும் 
உன் வாழ்வு - 
எப்போதேனும்
காதல் குறித்து 
நினைக்கத் தோன்றின்
எமக்காகவும் 
கொஞ்சம் சி்ந்து

கண்ணீர்த் துளி!

கருத்துகள் இல்லை: