முன்போல் இல்லை இப்பொழுது
ஒருவாரம் பத்துநாள் இருக்கும்போதே
எதிர்படும் முகங்கள் எல்லாம்
பேச்சாலும் பார்வையாலும்
பரிமாறிக்கொள்ளும்
என்ன வேலை நடந்தது
என்ன வேலை நடக்குது என்று
பிள்ளைகளும் பெரியவர்களுமாய்
மண் பூச ஒட்டடை துடைக்க
வெள்ளை பூச பூசி மெழுக
கோலம் போட ...
அறுத்த நெல் அவிக்க
அவித்த நெல் உலர்த்த
அரைக்க இடிக்க
பூசனியும் மொச்சையும் அவரையும்
பரிக்க அறுக்க
வீட்டுக்கும் நிலத்துக்கும்
நடையாய் மாறிமாறி நடக்க
ஓட ஓடிவர
தொற்றிக்கொள்ளும் பரபரப்பு
அடங்கி நாளாச்சி எல்லாம்
பிழைப்புதேடி வெளியூர்சென்று
அல்லாடும் வாழ்க்கையில்
புதியன புகுதலும்
பழையன கழிதலும் எங்கே
தவிக்கின்ற நிலையில்
தள்ளாடும் சூழலில்
போகியுமில்லை பொங்கலுமில்லை.
வீட்டுக்கு வீடு
மணியடித்து சைக்கிள் நிறுத்தி
விரல் இடுக்கில்
மஞ்சளாய் சிவப்பாய்
பச்சையாய் நீலமாய்
நிறம்நிறமாய்
முகவரிப்பார்த்து அடுக்கிய
வாழ்த்தட்டைகள்
வந்துதந்த அஞ்சல்காரர்
தருவதற்கொன்றுமின்றி
வெறுமைக்கு வருகிறார் வீதிவழி
எல்லா வாழ்த்தும்
செல்லிடப்பேசிக்குள்
சிக்கினமாய் சுருங்கிப்போன
குறுஞ்செய்தி வாழ்த்துக்குள்.
மாடுகள் மரிக்கின்றன
மாரியோ பொய்த்தப்பின்னால்
காளைகள் அடக்கி கன்னியர் கைப்பிடித்த
கதைகளும் மறையலாகும் இனி
உழுபவன் நிழலாய் இருந்த
உழுமாடுகள் எல்லாம் இன்று
நிழல்கரைந்து பாதம்தொடும்
நடுவெயில் நேரம்போல
அன்பற்ற வெட்டுகாரன்
கத்திக்கு காவு ஆச்சி.
காண்போர் இலர்
கண்டு கதை சொல்வோர் இலர்
இன்னும் இங்கு நாம்
எப்படிச்சொல்வோம் சொல்வீர்
பொங்கலோ பொங்கலென்று.
ஒருவாரம் பத்துநாள் இருக்கும்போதே
எதிர்படும் முகங்கள் எல்லாம்
பேச்சாலும் பார்வையாலும்
பரிமாறிக்கொள்ளும்
என்ன வேலை நடந்தது
என்ன வேலை நடக்குது என்று
பிள்ளைகளும் பெரியவர்களுமாய்
மண் பூச ஒட்டடை துடைக்க
வெள்ளை பூச பூசி மெழுக
கோலம் போட ...
அறுத்த நெல் அவிக்க
அவித்த நெல் உலர்த்த
அரைக்க இடிக்க
பூசனியும் மொச்சையும் அவரையும்
பரிக்க அறுக்க
வீட்டுக்கும் நிலத்துக்கும்
நடையாய் மாறிமாறி நடக்க
ஓட ஓடிவர
தொற்றிக்கொள்ளும் பரபரப்பு
அடங்கி நாளாச்சி எல்லாம்
பிழைப்புதேடி வெளியூர்சென்று
அல்லாடும் வாழ்க்கையில்
புதியன புகுதலும்
பழையன கழிதலும் எங்கே
தவிக்கின்ற நிலையில்
தள்ளாடும் சூழலில்
போகியுமில்லை பொங்கலுமில்லை.
வீட்டுக்கு வீடு
மணியடித்து சைக்கிள் நிறுத்தி
விரல் இடுக்கில்
மஞ்சளாய் சிவப்பாய்
பச்சையாய் நீலமாய்
நிறம்நிறமாய்
முகவரிப்பார்த்து அடுக்கிய
வாழ்த்தட்டைகள்
வந்துதந்த அஞ்சல்காரர்
தருவதற்கொன்றுமின்றி
வெறுமைக்கு வருகிறார் வீதிவழி
எல்லா வாழ்த்தும்
செல்லிடப்பேசிக்குள்
சிக்கினமாய் சுருங்கிப்போன
குறுஞ்செய்தி வாழ்த்துக்குள்.
மாடுகள் மரிக்கின்றன
மாரியோ பொய்த்தப்பின்னால்
காளைகள் அடக்கி கன்னியர் கைப்பிடித்த
கதைகளும் மறையலாகும் இனி
உழுபவன் நிழலாய் இருந்த
உழுமாடுகள் எல்லாம் இன்று
நிழல்கரைந்து பாதம்தொடும்
நடுவெயில் நேரம்போல
அன்பற்ற வெட்டுகாரன்
கத்திக்கு காவு ஆச்சி.
காண்போர் இலர்
கண்டு கதை சொல்வோர் இலர்
இன்னும் இங்கு நாம்
எப்படிச்சொல்வோம் சொல்வீர்
பொங்கலோ பொங்கலென்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக