வெள்ளி, 11 ஜூலை, 2014

உண்மை(யோ) சொல்

அடுக்கலைச் சப்தம்
திண்ணையில் இருந்து
உள் ஓடித் திரும்பினேன்
பூனை ஒன்று
சாளரம் வழி
குதித்தோட  எண்ணினேன்
அட நாமதானே
அனுப்பி வைத்தோம்
அதற்குள் மறந்து...

சிறிது கழித்து
கூடத்தில் நடைபயில
ரெண்டடிச் சென்று
திரும்பி உணர்ந்தேன்
ஊருக்குப் போனதை.

மீண்டும் ஓசை
மீண்டும் எட்டிப்பார்க்க
நானே நடந்தேன்
அவள்போல் அணிந்து
சரிபட்டு வாராது

எத்தனை நாளைக்கு
நான் உங்க கூடவே
அடைபட்டுகிடக்க
ஒரு நாலு நாள்
எங்கேனும் நிம்மதியா
போக விடுவீங்களா
என்றவளை
ஊருக்கு அனுப்பிவிட்டு
அனுப்பிய ஊருக்கு
மனம் புறப்பட்டது

போகும்போது
சொல்லிப் போனாள்
நீங்க இருக்க மாட்டீங்க
பைத்தியம்
உங்களுக்கு என்மேல்
எப்பொழுதும்

அவள் சொன்னது
உண்மை(யோ) சொல்வீர்

கருத்துகள் இல்லை: