வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தெரிந்தும்தெரியாதது

உங்களை
எஙகேயோ பார்த்த மாதிரி
எங்கே... எப்போ என்றுதான்
சட்டென்று  நினைவுக்கு வரல
முன் பின் பார்த்திரா விட்டாலும்
சொல்ல வேண்டி வந்தால்
சொல்கிறோம்

நெருங்கிப் பழகி
எல்லாம் தெரிந்திருந்தாலும்
ஒன்றுமே
தெரியாததுபோல்
முகம் மறைக்கிறோம்

தெரிந்தது தெரியாததுமாய்
தெரியாதது தெரிந்ததுமாய்
நகர்த்துகிறது
வாழ்க்கை.

கருத்துகள் இல்லை: