சனி, 31 ஆகஸ்ட், 2013

உயிர்

கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்

துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க

உண்மையாகிப்போனது

யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு


உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக

மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.





கருத்துகள் இல்லை: