சனி, 27 மே, 2017

உபயம்

உபன்யாசப் பண்டிதர்
உரக்கச் சொன்னார்
யாரோட உபதேசமும் பிடிக்காது

நல்ல பாடகர்
கோபத்தில் ஆழ்ந்தார்
யாரும் துதிபாடவில்லை

விழித்தெழும் முன்பே
காத்துக் கிடக்கிறது
அவளுக்கான சமையலறை

இதற்கும் அதற்குமாய்
அளிக்கிறான் வீதி
உபயம் போதை


சிறு தூறல்
பிரவாகம் எடுத்தது
ஓராயிரம் கவிதைகள்


கருத்துகள் இல்லை: