வியாழன், 22 மார்ச், 2012

வாழ்வின் பெரு நடை

உத்தியோகத்தில்
யாரும்
எளிதில் நெருங்கமுடியாத
சிம்ம சொப்பனம்.
விதிகளைக் குறித்து
எழுதுவதில்லை
புலி என்று பெயர்.
யாரிடத்தும் எதற்கும்
கெஞ்சிக் குழைந்த தில்லை
பொன்னம்மாளைத் தவிர.
ஏழாவதாய்ப் பிறந்த பிள்ளைக்கு
குலதெய்வத்தின் பெயரை
வைத்த திருப்தி மனசுக்குள்
முனியசாமி என்று.
தன்
மூன்று மகளுக்கும்
நல்ல இடத்தில் மாப்பிள்ளை
பார்த்துக் கொடுத்ததில்
மனநிறைவு எப்போதும் உண்டு.
பிள்ளைகள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு துறையில்
பேர் சொல்லும் படி இருப்பதைக்காண
பொன்னம்மா இல்லையே என்பதைத்தவிர
வேறொரு குறையில்லை
கந்தசாமிக்கு.
தன் வயதைக்காட்டி
மகள் பெத்த பேத்திக்கும்
மகன் பெத்த பேரனுக்கும்
கல்யாணம் முடித்த ஆனந்த கூத்து
நிழலாடும் நினைக்கையில்.
இப்படி எல்லாம் முடிந்தது என்றாலும்
விடாது தொடர்கிறார்
விடியற்காலை நடைபயிற்சியை
இன்னும்
கொஞ்ச நாள் உயிரோடு இருப்போமென்று.

கருத்துகள் இல்லை: