வியாழன், 22 மார்ச், 2012

சினிமா சினிமா


முந்தா நேத்து குந்திகினு
சும்மா இல்லாம
குச்சிக்கினே படம் பாக்க
கௌம்பி போனங்க
முட்டி மோதி
சட்டை கிழிஞ்சி
சீட்டு வாங்கினு
தலை வட்டம் போடும்
பேனு பாத்து ஒக்காந்த போங்க
விசிலடிச்சான் விசிலடிச்சான்
ஒண்னும் நடக்கல
பட்டுன்னு ஒரு சோ் உதைச்சான்
ஓனர் மவன் படத்தப் போட்டுடான்
மொத மொதல்ல எழுத்து ரீலு தாங்க வந்திச்சி
அப்புறம் தெரை முழுக்க
எம்மா பெரிய கிராமம் தெரிஞ்சிச்சு
இம்மா பெரிய கிராமமானு பக்கத்துல கேட்டன்
அட நீ ஒன்னு
வெவரமில்லா கிராமத்தான் போல
இது சினிமா ஸ்கோப்
சொல்லிகினே படத்துக்குள்ள
முழுகி பூட்டாங்க
சின்ன பையன் சின்ன பொண்ணு
சோடி காட்டுனான்
கண்ண திறந்து மூடுமுன்னே
பாட்டும் பாடுனான்
வழி முழுசும்
வாழை மரம் தென்ன மரந்தான்
அட அதுக்குள்ள சண்டப்போட்டு
எல்லா காலிதான்
அக்கம் பக்கம் இருந்தவன்லா
நெளிஞ்சிக்கிட்டாங்க
என்னடான்னு உத்துப் பாத்தா
சண்ட சூப்பராம்
அப்புறமா திரும்ப ஒரு பாட்டு வந்திச்சி
அதுக்கப்புறமா இன்டர்வெல் நேரம் வந்திச்சி
பண்ணையாரு பொண்ணு அது
ஏழை மவனுங்க - பையன் ஏழை மவனுங்க
பாதிபடம் இப்படிதான்
நகர்ந்திச்சி போங்க
என்ன பண்ணா ஏது பண்ணா
ஒன்னும் தெரியல
பாத்தா பணக்காரன் ஆயிட்டான்
பையன் தாலி கட்டிட்டான்
தாலி கட்டும் போது திரும்ப ஒரு
சண்ட அடிச்சாங்க
அப்புறம்
கட்டில் போட்டு காலுப் போட்டு
பாட்டுப்படிச்சாங்க
கதை முடிஞ்சி கனவு முடிஞ்சி
ஜனங் கௌம்பிச்சி
கண்ட கண்றாவியில்
மனசெல்லாம் வாடி வதங்கிச்சி
நா
முந்தா நேத்து குந்திகினு
சும்மா இல்லாம.

கருத்துகள் இல்லை: