வியாழன், 22 மார்ச், 2012

பயம்கொள்


கரப்பான் பூச்சுக்கு அடுத்து
என்னோடு
அதிகம் உறவாடும் உனக்கு
பயம் கொள்
அச்சம் தவீர் என்பதெல்லாம்
அடுத்தவனுக்கே
பயம் கொள்
ஊறும்
உர்..ர் என்று பறக்கும்
பறக்கும் வேளை
மறக்கலாமென்றால்
தொடர்ந்து ஊறும்
மனசுக்குள்
அச்சம் தரும்
அச்சம் தரவென்றே
அப்படியொரு நிறம் கரப்பான்பூச்சிக்கு
கருப்புமில்லாமல்
சிகப்புமில்லாமல்
மிரட்டும்படியாய்
அமைந்த மீசை
சொல்வாய் நீ
மருந்து வைக்கலாம்
மருந்து வைத்த
சுவடே தெரியாமல்
காற்றில் கலந்த
மணத்தில் கொல்லலாமென
இருந்தும் தொடரும்
அச்சம்
நாளை நம்மை
யாரேனும்
இப்படிக் கொன்றால்
பயம் கொள்
அச்சம் தவீர்
அடுத்தவனுக்கு.

கருத்துகள் இல்லை: