அதெல்லாம் ஒரு காலம்
இப்ப
யாரு செய்யுறா சொல்
கேட்டா... கேட்கும்போதே
சண்டைக்கு...வார்த்தைகளை
வாய்க்குள் முழுங்கிக் கொண்டிருந்தாள்
அம்மா.
கொஞ்சமாச்சும்
சும்மான்னு இருக்காங்களா
தின்ன ருசி...
எப்பவும் ... எதுவாச்சும்
முணுமுணுத்துக்கிட்டே
அதுக்கெல்லாம்
யாருக்கிருக்கு
சொல்லுங்க நேரம்...
பேசமா... மனைவி.
பாட்டி என்னமோ
சொன்னாங்களே
அது என்ன
வாடாம்
சொல்லுப்பா
மகள்.
யாரிடம்
எப்படி எதைச் சொல்ல
தின்ற ருசியை
தின்ன ஏங்கும் மனதை
தின்னவே இல்லை யென்றான
நிலையை
அம்மாவிற்கும்
மனைவிக்கும்
மகளுக்கும்
ஒருசேர
நான்.
*தலைப்பு உதவி நடராஜன் கல்பட்டு நரசிம்மன் அவர்கட்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக