வெள்ளி, 30 மே, 2014

சந்திப்பு வேண்டி...

எத்தனையோ தருணங்களில்
நாம்
எவையெவை குறித்தோ
தீவிரமாய்
நமக்குள்
சம்பாஷித்திருக்கிறோம்.

அடுத்தவர் பார்வையில்
மாபெரும் சர்ச்சையாய்
மிளிர
பேசியவை உண்டு.

விலக்க எண்ணி
விலகிப் போனோர்
ஏராளம்.

இன்னும்
கதைக்கிறோம்
கதைப்பினூடே
கூடும் சிக்கல்.

என்றாலும்
ஒவ்வொரு கதைப்பின்
பின்னும்
தொக்கி நிற்கிறது

ஓர் வார்த்தை
அடுத்த
நம் சந்திப்பு
வேண்டி.

கருத்துகள் இல்லை: