வியாழன், 29 மே, 2014

என்னடீ இது...

என்னடீ இது
கை கால் வேறாய்
கலைத்துப்போட்ட தூக்கம்

விடியலில் விழித்து
முடங்கும் வரை
வேலை பழகு...

முடங்கியபொழுதும்
சுயநினைவில்
இரு...இன்றேல்

சுற்றம்...முற்றும்...
ஊரு...உலகம்
எல்லாம் ஏசும்...

புள்ளைய வளர்த்திருக்கும்
லட்சணம் பாரு
உனக்கில்லை எதுவும்

உன்னை ஏன்
காரணம் வேண்டுதோ
மனசு...

நீ மட்டுமில்லேடீ
உன் போல் நானும்
பெண்.

கருத்துகள் இல்லை: