சனி, 31 மே, 2014

மரம்

யாரேனும்
நல்ல கவிதை
கேட்டால் சொல்வேன்
மரம்.

நீண்டு வளர்ந்து
இருள் பரப்பி
நிற்கும்
மரம்போல்
நீள் கவிதை
வேறெது.

யாரால்
எழுத இயலும்
மரம் போல்
ஓர்
நல்ல கவிதை
இயற்கைத் தவிர.

கருத்துகள் இல்லை: