மரங்கள் இலைகள் உதிர்ந்து
இளம் தளிர்கள்
துளிர்க்க தொடங்கி விட்டது.
எல்லாரும்
பேசிக்கொள்கிறார்கள்
இனி
பூக்கும் காய்க்குமென்று.
ஊரார் பேச்சினை
கேட்கும்போதெல்லாம்
தூர தேசம் வந்துவிட்ட
என்னுள்
தோன்றி மறைகிறாள்
நகுமலர்
இனவெறி தாக்குதலில்
மாண்டுபோன
என் மகள்.
அவள் ஆசையாய்
வளர்த்த
மரத்தடியில்
நீருற்றும் வேளை
ரத்தம் ஊற்றி
மாண்டுபோனாள்.
என் வீட்டுவாசலில்
இந்நேரம்
இலைகள் உதிர்த்து
துளர்விட்டு
பூக்குமா
என்மகள்
ஆசையாய் வாசலில்
வளர்த்த
சங்குப்பூ மரம்
அவள் ரத்தம் குடித்த
நன்றிக்கு
சிவப்பாய் ஒரு
பூ
இளம் தளிர்கள்
துளிர்க்க தொடங்கி விட்டது.
எல்லாரும்
பேசிக்கொள்கிறார்கள்
இனி
பூக்கும் காய்க்குமென்று.
ஊரார் பேச்சினை
கேட்கும்போதெல்லாம்
தூர தேசம் வந்துவிட்ட
என்னுள்
தோன்றி மறைகிறாள்
நகுமலர்
இனவெறி தாக்குதலில்
மாண்டுபோன
என் மகள்.
அவள் ஆசையாய்
வளர்த்த
மரத்தடியில்
நீருற்றும் வேளை
ரத்தம் ஊற்றி
மாண்டுபோனாள்.
என் வீட்டுவாசலில்
இந்நேரம்
இலைகள் உதிர்த்து
துளர்விட்டு
பூக்குமா
என்மகள்
ஆசையாய் வாசலில்
வளர்த்த
சங்குப்பூ மரம்
அவள் ரத்தம் குடித்த
நன்றிக்கு
சிவப்பாய் ஒரு
பூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக